சாணக்கியன் உட்பட 7 பேருக்கு அழைப்பாணை
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கோ.கருணாகரம் மற்றும் கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.ஏன் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, குறித்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி நீதிமன்றல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: