கடந்த 24 மணித்தியாலத்தில் 52 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் மூன்றுமாத காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 2,905 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: