நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் நேற்றைய தினம் 510 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தேசிய கொவிட் 19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மினுவாங்கொடை கொத்தணி உருவான பின்னர் 10443 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண் 13929 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 8285 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு,5383 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: