பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமனம்
பாராளுமன்றத்தில் பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பில், பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பரிந் துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீகரித்துள்ளார் என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: