இன்று அதிகாலை 5 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது
மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்து ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதறை, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், பொரெஸ்மோர், பார்பர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெள்ளம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கபப்ட்டுள்ளன.
மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளிலிருந்து எவரும் வெளியே செல்லவோ, எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனை மீறினால் குற்றச் சடடத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் எனவும் எச்சரித்துள்ளார்.
எனினம் தனிமைப்படுத்திய பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர்,முதலீட்டு சபை மற்றும் ஏற்றமதி அபிவிருத்தி சபை ஆகியனவற்றில் கடமையாற்றும் பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: