புகையிரத நிலையங்களில் கடுமையான முறையில் பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்த தீர்மானம்
புகையிரத நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையான முறையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முகக் கவசம் அணிதல், கை கழுவதல் மற்றும் வெப்பநிலை பரிசோதனை ஆகிய சுகாதார நடைமுறைகள் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.
நாடு முழுவதும் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் இந்த சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: