கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத்தடை அமுல்
கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணிவரை, 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 12,13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளிலும், கொழும்பு 01 மற்றும் 02 ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
No comments: