நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்
நாட்டில் நேற்றைய தினத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைபீரியா,ஹொங்கொங்,பஹ்ரைன்,இந்தியா,ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3281ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3060 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 208 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: