நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்
நாட்டில் நேற்றைய தினத்தில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும்,அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும்,எத்தியோப்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் நேற்று கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3324 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3129 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 182 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: