நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 187 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 122 பேரும், கட்டாரில் இருந்து 58 பேரும், அபுதாபியில் இருந்து 7 பேரும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்
நாடு திரும்பியுள்ள அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: