தேசிய பாடசாலைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலணியின் பரிந்துரை
நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாகவும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு தேசிய பாடசாலையேனும் இல்லாதுள்ளதாகவும் செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த செயலணி கல்வி நடவடிக்கைகளில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல திட்டங்களை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments: